கவிதை
எழுத அமர்ந்தேன் ...!
ஒன்றுமே
வரவில்லை....
உன்
பெயரைத் தவிர....!
என்
பேனா
திரும்ப திரும்ப
உன்
பெயரை மட்டுமே
கிறுக்கி
கொண்டிருந்தது .....!
அன்பையே
பெயராக
கொண்டவளே ...!
என்
பேனாவின்
கூர்முனை
உன்
பேரை குத்தும்
என்பதாலேயே
நான்
உன்
பெயரையே
எழுதுவதில்லை....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக