சனி, 5 பிப்ரவரி, 2011

சோகம்






பூக்களே 
இல்லாத போது 
செடிக்கு 
என்ன 
மகிழ்ச்சி...?
நீயே 
இல்லாத போது
எனக்கென்ன 
மகிழ்ச்சி....?

உன்னை 
நினைக்கும் போதே 
உன் 
நினைவெல்லாம்
என் 
கண்ணீராய் 
மாறுகிறது ....!

கண்ணீரை 
மட்டும் 
தந்த
நீ
அதை
துடைக்க 
மறந்தது
ஏன் ?

உன் 
நினைவால்
வரும்போது ....
என்
கண்ணீரும் 
புனிதமாகிறது....!

உன் 
நினைவு
வரும்போது 
உப்பு
கண்ணீரும் 
இனிக்கிறது...!

இனியவளான
உன்னை 
இனி 
ஒரு போதும்
நினைக்கமாட்டேன் 
என
நான்
நினைக்கும் போதே
உன்னை
நினைத்துவிடுகின்றேன்  ....!

கனியாகிய
உன்மேல் 
பனியாகி
விழவேண்டும்
என 
தோன்றுகிறது...
ஆனால்
பகலவன்
வரும் போது
பனி
மறைந்து தானே
ஆக வேண்டும்....!
நானும்
உன்னை
மறந்து தானே
போக வேண்டும்...!

என்
கண்ணின்
கருவிழிகள் 
விழித்துகொண்டே தான்
இருக்கிறது....!
என்றாவது 
நீ 
வந்துவிடமாட்டாயா என்று...!
நான் 
உன்னை 
நேசித்தது 
உனக்கு 
தெரியும் ...!
நீ 
பிரிந்ததால் 
நான்
பட்ட கஷ்டம்
யாருக்கு 
தெரியும்...?

உன் 
உடலை
நான்
விரும்பவில்லை ...
உன் 
உள்ளத்தையே 
விரும்புகிறேன்...
என் 
அன்பு 
புனிதமடி....!

அடிக்கடி 
உன்
நினைவு 
வரும் போது
அடிக்கு அடி
என்
நெஞ்சு 
வலிக்கிறது...! 

வலியிலும் 
ஒரு 
சுகம் 
உள்ளதடி....!
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக