இப்போது
தலைப்பில்லாத
கவிதையாக
நான்....!
நீ
தலைப்பாகி
எனக்கு
ஒரு
அர்த்தம்
கொடுப்பாயா...?
உயிரே...!
என்னில்
இன்னும்
சாகவில்லை
உன்
நினைவுகள்....!
அதனாலே
சாகிறது
என்
நினைவுகள் ....!
என்
கனவுகளிலும்
உன்
நினைவுகளே....!
உன்
நினைவுகளில்
என்
நிழலாவது
உண்டா?
உயிரில்லாத
நிழல் !
இன்று
நீயில்லாத
நானும்
அதுபோல்....!
நீ
வாழும்
என்
உள்ளம் கூட
ஒரு
தாஜ்மஹால்
தான்....!
நீ
பவுர்ணமி
நிலவாக
தெருவில்
வந்ததால்
நிலவு
ஓடிபோய்
மறைந்து
அமாவாசை ஆனது....!
உன்
முகதுடிப்பு
என்
நாடித்துடிப்பை
நிறுத்திவிடும்
போலிருக்கிறது...!
என்
கவிதைகளின்
வரிகளையே
வாரிவிட்டவள்
நீ...!
என்
பேனாவின்
கூர்முனையை
தேயவைத்தவள்
நீ....!
தடம் மாறாமல்
சென்ற
என்னை
தடுமாற
வைத்தவள்
நீ...!
உன்னிடம்
பேசும்போது
மட்டும்
ஊமையாகிறேன் ...!
ஊமையாய்
இருப்பதிலும்
ஒரு
சுகம்
உள்ளதடி...!
தலைவிரித்து
கொண்டிருந்த
என்
இதயம்
தலைதெரித்து
ஓடியது...
உன்னை
கண்டபோது...!
தடைசெய்ய பட்ட பகுதி...!
அவள்
இதயம்...!
அத்துமீறி
நான்
நுழைந்ததால்
இதய
துறையால்
கொடுக்கப்பட்டது
ஆயுள் சிறை....!
நீ
என்
நித்திரையை மட்டுமா
கலைத்தாய்..?
என்
கனவை
கூடத்தான்.....!
என்
தூக்கத்தை
கலைத்த
நீ
உன்னால்
ஏற்பட்ட
துக்கத்தை
கலைக்க
ஏன்
மறந்தாய்....?
லேசான
என்
இதயம்
கனமானது
உன்
நினைவை
கொண்டதால்...!
காலங்கள்
மறைந்துவிட்டன....!
ஆனால்
இன்னும்
மறையவில்லை
உன்னால்
ஏற்பட்ட
கோலங்கள்
மட்டும்....!
சொல்வதற்கு
ஒன்றுமில்லை...!
மறக்கவில்லை
உன்னை..
மறுக்கிறேன்....!










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக