செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

நிழலை தேடும் மழலை





காரின் 
கதவை தட்டும்
பெண்ணிற்காக
இனி 
நீதியே
கதவை தட்டும்.....!

கை குழந்தையுடன்
கை பிச்சை கேட்கும் -இந்த
கைம்பெண்ணிற்கு
கை கொடுக்காவிட்டாலும் 
கை கொட்டி சிரிக்காதீர்கள் ....!
கை காட்டி விடுங்கள் -
வேறொருவரை உதவிக்காக ...!

தேன்
கொடுக்காவிட்டாலும் - பேச்சில்
தேள்
கொடுக்காகி விடாதீர்கள் .....!

ஒரு வேளை
சோற்றுக்கு
நாம்
ஒருவேளை
உதவுவோமானால்
அதுவே
போதும் ....!

மழையில் 
நனையும்
மழலைக்கு
குடை
கொடுக்காவிட்டாலும்
அது
நனையாமல்
இருக்க
ஒரு
மரத்தை
காட்டுங்கள்....!

நிழலை தேடும்
மழலை-க்கு  
மரத்தை
காட்டுவோம்...!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக