சனி, 5 பிப்ரவரி, 2011

என் கனவுகளின் கதாநாயகியே !


 




என் 
கனவுகளின் 
கதாநாயகியே .....!
உன் 
அழகிற்கு 
வானமே
எல்லை ....!

தங்க
இழைகள்
உன்
தலைமுடிகள் ...!

வெள்ளை
பூக்கள் 
உன்
பற்கள்...!

கூவும் 
குயிலுக்கே
சவால் விடுகிறது 
உன் 
குரல்....!

நீ 
துப்பும்
எச்சில் 
மலரில் இருந்து
வழியும்
தேன்...!


என்னை விட 
உன் 
நிழல் 
அழகானது....!


உன்னுடன் 
பேசும்போது மட்டும்
வார்த்தை
பஞ்சம்
ஏற்படுகிறதே...!


குழந்தைத்தனம் 
செய்வதில் 
குழந்தை
நீ....!

நிலா 
தெருவில்
நடப்பதை 
பார்த்திருக்கிறேன் ...
நீ 
நடக்கும் போது ...!

நீ 
இருக்கும்
வீடு
சொர்க்கம் தான் ....!
தேவதை
இருக்கும்
இடத்தை 
வேறு
எப்படி
அழைப்பது....?

நீ 
வெட்கப்பட்டு 
முகத்தை 
மறைத்து
கொள்ளும் போது
மலையின்
பின்னால் 
நிலவு
ஓடி 
ஒளிந்து கொள்வது
போலிருக்கிறது .....!

என் 
உயிரின் 
அத்தனை
அணுக்களிலும் 
ஆணி
அடித்தது போல 
ஆழமாய்
பதிந்திருக்கிறது 
உன்
முகம்....!

எனக்கு
கனவு என்று
ஒன்று
இருந்தால்
அதிலும்
நீ
தான்
கதாநாயகி......!















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக