ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

எனக்குள்ளே நான் சிரிக்கிறேன்....





உன்னையே 
சுற்றி சுற்றி
நிழலிட்ட 
தருணங்களின்
நகல்கள்.............! 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.... 

வகுப்பரையில்
நான்
உன்னை 
மட்டுமே
பார்க்க...
வெகு நேரம்
அழுது கொண்டிருக்கும்
குழந்தைக்கு
பாலூட்டும்
தாயை போல..
நீ
பார்த்த  
அந்த
பார்வையில்.....
பிரபஞ்சத்தின்
எல்லைக்கே 
சென்று
வந்த
தருணங்களை.....
நினைத்து...

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்..... 

சில  
சந்தர்பங்களில்
நீயும்
நானும்
ஒரே நிற 
ஆடைகளை
அணிந்து 
வந்த போது....
ஆயிரம்  
இறக்கைகள்
கொண்ட
அதிசய  
பறவையாகி
சிலாகித்த
அந்த  
உணர்வை
நினைத்து... 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

நீ
என்னருகே
கடந்து சென்ற
தருணங்களில்.....
இருவேறு
காந்தபுலங்களுக்கு
இடையில்
சிக்கிய 
இரும்பு 
துகள்களாய்
நான் 
பட்ட 
அவஸ்தையை
நினைத்து....... 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

ஒவ்வொரு
மனிதனுக்கும்
ஒருமுறைதான்
மரணம்..
நீ  
என்னை
ஒரக்கண்ணால்
பார்த்த
ஒவ்வொரு
கனமும்
எனக்கு 
மரணந்தான்....!
ஆனால்
அடுத்த
நொடியே
பிழைத்த
விந்தையை
நினைத்து.......!

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

நீ 
என்னுடன்
எப்போதாவது தான்
பேசுவாய்...
ஆண்களுக்கு
வெட்கம் வருவது....
அதுவரை
தெரியாது....
அதை 
நினைத்து....

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக