வியாழன், 3 மார்ச், 2011

உன்னை பற்றி


சேலை 
கட்டிய
சிலையே...!
 



வழி
தெரியாமல்
நடுக்கடலில்
தத்தளிக்கிறது 
என் 
இதய கப்பல் ....!
நீ
கலங்கரை விளக்காகி
என்னை 
கரை
சேர்ப்பாயா?

 
நீரின்றி 
அமையாது 
உலகு...!
அதுபோல் 
நீயின்றி
அமையாது 
என் 
உலகு.....!



உன் 
இதயத்தில் 
எனக்கு 
இட ஒதுக்கீடு 
உண்டா?
உன்
இதய 
அறைகள் 
நான்கில்
ஒரே 
ஒரு 
அறை மட்டும்
கொடு
அது
போதும்
எனக்கு ....!


என்
இரத்த 
அணுக்களிலும் 
உன் 
முகமே..!


உன் 
ஓர 
பார்வையில் 
ஓராயிரம் 
ஆண்டுகள் 
வாழலாம்...!


உன் 
அழகினை 
அளக்க
இன்னும் 
அளவுகோல் 
கண்டு பிடிக்கபடவில்லை....!



என் 
சிந்தனைகளை 
சிறைபடுத்தும் 
விலங்குகள் 
உன் 
கண்கள்....!


கடற்கரையில் 
உன்
பாதம்
பட்டதும் 
கடல் நீரும் 
இளநீரானது...!



உன் 
இதயத்துக்குள் 
நான் 
வர
நுழைவுத்தேர்வு....!
அதனால் தான் 
உன் 
கண்களை 
படித்து 
கொண்டிருக்கிறேன்....!


இருக்க 
இடம் 
கிடைக்காமல் 
இரு 
இறக்கைகளோடு
அலையும் 
பறவைக்கு
அடைக்கலம் 
கொடுக்கும் 
மரம் போல
உன் 
இதயத்தில்
எனக்கு 
ஒரு
இடம் 
கொடுப்பாயா...?


நீ 
சுவாசித்த 
அதே 
காற்றை 
நானும் 
சுவாசித்திருக்கிறேன் ....!
அதனால் தான் 
இன்னும் 
உன் 
நினைவு 
என்னில் 
நீச்சலடிக்கிறது...!


பலர் 
என்னை 
பார்த்து 
நீ
கொடுத்துவைத்தவன் 
என்றார்கள்....!
உண்மை தான்...!
என் 
இதயத்தை 
உனக்கு 
கொடுத்து
அதை 
உன்னிடமே
வைத்து விட்டவன் 
நான்....!


அழகே!
உன் 
அழகின் 
இரகசியம் தான் 
என்ன?
சொல்!
உலக அழகி
என்னிடம் 
கேட்கிறாள்....!


என் 
கைபேசி 
ஒலிக்கும் 
போதெல்லாம் 
நீ தான் 
அழைக்கிறாயோ என்று 
நான் 
பார்க்கும் 
போதெல்லாம் 
மாற்றமே இல்லாமல் 
அதே 
ஏமாற்றமே 
கிடைக்கிறது.....!


கடல் அலைகள் 
எப்போதும் 
இரைச்சலிட்டு 
ஏதோ
சொல்லி
கொண்டிருக்கின்றன...!
நான்
என்னவென்று கேட்டேன்...?
அது
கண்ட
பெண்களிலே
உலக அழகி   
நீ தான் 
என்று
ஓயாமல்
உரக்க
கத்தி கொண்டிருக்கிறது ....!



அதனால் தான்
அவை 
எப்போதும்
உன் 
பாதங்களை
தொட்டு பார்க்க 
விரும்பியே
கரைக்கு
வருகின்றன ....!



























 































































புதன், 9 பிப்ரவரி, 2011

நான் சாகாமல் சாகிறேன்...!


நீ 
சிரிக்காமல் 
சிரிக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை
பார்க்காமல்
பார்க்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னுடன்
பேசாமல் 
பேசுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
சுடாமல் 
சுடுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
தொடாமல் 
தொடுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னை 
அணைக்காமல் 
அணைக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...!

 நீ
என் 
இதயத்தில் 
வலிக்காமல் 
வலிக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னை 
பற்றாமல் 
பற்றுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னை 
சுமக்காமல் 
சுமக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
வருடாமல் 
வருடுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
தேற்றாமல் 
தேற்றுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னுடன் 
பழகாமல் 
பழகுகிறாய்...!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னில் 
வாழாமல் 
வாழ்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
போகாமல் 
போகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
வராமல் 
வருகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
தீண்டாமல் 
தீண்டுகிறாய்...!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னுடன்
நிற்காமல் 
நிற்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...!






































தலைப்பில்லாத கவிதை


இப்போது 
தலைப்பில்லாத 
கவிதையாக 
நான்....!
நீ
தலைப்பாகி 
எனக்கு 
ஒரு 
அர்த்தம்
கொடுப்பாயா...?





உயிரே...!

என்னில் 
இன்னும் 
சாகவில்லை 
உன் 
நினைவுகள்....!
அதனாலே
சாகிறது 
என் 
நினைவுகள் ....!

என் 
கனவுகளிலும் 
உன் 
நினைவுகளே....!
உன் 
நினைவுகளில்
என் 
நிழலாவது 
உண்டா?
 

உயிரில்லாத 
நிழல் !
இன்று 
நீயில்லாத
நானும்
அதுபோல்....!
 
நீ 
வாழும் 
என் 
உள்ளம் கூட
ஒரு 
தாஜ்மஹால் 
தான்....!



நீ 
பவுர்ணமி 
நிலவாக
தெருவில் 
வந்ததால் 
நிலவு 
ஓடிபோய்
மறைந்து
அமாவாசை ஆனது....!

  




உன் 
முகதுடிப்பு 
என் 
நாடித்துடிப்பை 
நிறுத்திவிடும் 
போலிருக்கிறது...!

என் 
கவிதைகளின்
வரிகளையே
வாரிவிட்டவள் 
நீ...!

 
என் 
பேனாவின் 
கூர்முனையை 
தேயவைத்தவள் 
நீ....!

தடம் மாறாமல் 
சென்ற 
என்னை 
தடுமாற
வைத்தவள்
நீ...!

உன்னிடம் 
பேசும்போது
மட்டும்
ஊமையாகிறேன் ...!
ஊமையாய்
இருப்பதிலும் 
ஒரு 
சுகம் 
உள்ளதடி...!




தலைவிரித்து 
கொண்டிருந்த 
என்
இதயம் 
தலைதெரித்து
ஓடியது...
உன்னை
கண்டபோது...!



தடைசெய்ய பட்ட பகுதி...!
அவள் 
இதயம்...!
அத்துமீறி 
நான் 
நுழைந்ததால்
இதய
துறையால்
கொடுக்கப்பட்டது 
ஆயுள் சிறை....!


நீ 
என் 
நித்திரையை மட்டுமா 
கலைத்தாய்..?
என்
கனவை
கூடத்தான்.....!

என் 
தூக்கத்தை 
கலைத்த
நீ
உன்னால்
ஏற்பட்ட
துக்கத்தை 
கலைக்க 
ஏன்
மறந்தாய்....?

லேசான 
என் 
இதயம் 
கனமானது
உன் 
நினைவை
கொண்டதால்...!



காலங்கள் 
மறைந்துவிட்டன....!
ஆனால்
இன்னும் 
மறையவில்லை 
உன்னால்
ஏற்பட்ட 
கோலங்கள் 
மட்டும்....!

சொல்வதற்கு 
ஒன்றுமில்லை...!
மறக்கவில்லை 
உன்னை..
மறுக்கிறேன்....!





















நீ இல்லாவிட்டால் !




நான் 
மலர் என்றால் 
அதன் 
இதழ்கள்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான் 
வானவில்  என்றால் 
அதன் 
நிறங்கள்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
மின்னல் என்றால் 
அதன் 
ஒளி
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
உள்ளங்கை என்றால் 
அதன் 
ரேகைகள் 
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
நூலகம் என்றால்
அதன் 
நூல்கள் 
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
கண்கள் என்றால்
அதன் 
கண்மணிகள் 
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
புத்தகம் என்றால்
அதன்
பக்கங்கள்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
கைகள் என்றால்
அதன்
விரல்கள்
நீ.....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
உடல் என்றால்
அதன்
உயிர்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
சிற்பம் என்றால்
அதன்
சிற்பி
நீ.....! 

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
ஓவியம் என்றால்
அதன்
ஓவியன்
நீ....! 

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
பறவை என்றால்
அதன்
சிறகுகள் 
நீ.....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
சேலை என்றால்
அதன்
நூல்கள்
நீ....! 

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான் 
என்றால் 
நீ.....!


நீ
இல்லாவிட்டால்
நானே
இல்லை....!
















ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

கொலைகாரி






ஒரு
நொடியில் 
என் 
ஒவ்வொரு 
நாடியும் 
ஆடி போனது..
உன்னை 
கண்டபோது.....!

உன்னை 
முதலில்
கண்டபோது
வியர்த்தது 
என் முகம் 
மட்டுமல்ல
என் 
இதயமும்
கூடத்தான்......!

நான்
நானாக 
இல்லை...!
காரணம் 
உன் 
மீன் 
கண்களின் 
தொல்லை...!

அன்று 
நான் 
கொலை செய்யப்பட்டேன் !
உன் 
கண்கள்
கொலைக்கருவி..!
நீ தான்
கொலைகாரி....!















முகவரி






அவளின் 
முக 
விலாசத்தை 
காட்டினாள்....!
இந்த
முள்ளின் 
முகவரி
தொலைந்து 
போனது.....!








எனக்குள்ளே நான் சிரிக்கிறேன்....





உன்னையே 
சுற்றி சுற்றி
நிழலிட்ட 
தருணங்களின்
நகல்கள்.............! 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.... 

வகுப்பரையில்
நான்
உன்னை 
மட்டுமே
பார்க்க...
வெகு நேரம்
அழுது கொண்டிருக்கும்
குழந்தைக்கு
பாலூட்டும்
தாயை போல..
நீ
பார்த்த  
அந்த
பார்வையில்.....
பிரபஞ்சத்தின்
எல்லைக்கே 
சென்று
வந்த
தருணங்களை.....
நினைத்து...

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்..... 

சில  
சந்தர்பங்களில்
நீயும்
நானும்
ஒரே நிற 
ஆடைகளை
அணிந்து 
வந்த போது....
ஆயிரம்  
இறக்கைகள்
கொண்ட
அதிசய  
பறவையாகி
சிலாகித்த
அந்த  
உணர்வை
நினைத்து... 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

நீ
என்னருகே
கடந்து சென்ற
தருணங்களில்.....
இருவேறு
காந்தபுலங்களுக்கு
இடையில்
சிக்கிய 
இரும்பு 
துகள்களாய்
நான் 
பட்ட 
அவஸ்தையை
நினைத்து....... 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

ஒவ்வொரு
மனிதனுக்கும்
ஒருமுறைதான்
மரணம்..
நீ  
என்னை
ஒரக்கண்ணால்
பார்த்த
ஒவ்வொரு
கனமும்
எனக்கு 
மரணந்தான்....!
ஆனால்
அடுத்த
நொடியே
பிழைத்த
விந்தையை
நினைத்து.......!

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

நீ 
என்னுடன்
எப்போதாவது தான்
பேசுவாய்...
ஆண்களுக்கு
வெட்கம் வருவது....
அதுவரை
தெரியாது....
அதை 
நினைத்து....

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....












தேடல்





எங்கே
போனாய்..?
என்னைவிட்டு....!
தன் மீது
விழுந்த
மழைத்துளியை
தேடுகிறது...பூமி !
என்னிலே
கலந்து போன
உன்னை
வெளியில் தேடுகிறேன்
நாளும்.......!











சலவை






சலவை செய்ய 
செலவு செய்யாமல்...
அழுக்கு 
துணியை
போட்டிருப்பேன்
நான்.....!

ஆனால்
உன்னை 
கண்ட பிறகு...
என்னை 
அழகாய் 
ஆக்கவே...
என்
துணியை
சலவை செய்யவே 
செலவு 
செய்கிறேன்......!












சனி, 5 பிப்ரவரி, 2011

என் கனவுகளின் கதாநாயகியே !


 




என் 
கனவுகளின் 
கதாநாயகியே .....!
உன் 
அழகிற்கு 
வானமே
எல்லை ....!

தங்க
இழைகள்
உன்
தலைமுடிகள் ...!

வெள்ளை
பூக்கள் 
உன்
பற்கள்...!

கூவும் 
குயிலுக்கே
சவால் விடுகிறது 
உன் 
குரல்....!

நீ 
துப்பும்
எச்சில் 
மலரில் இருந்து
வழியும்
தேன்...!


என்னை விட 
உன் 
நிழல் 
அழகானது....!


உன்னுடன் 
பேசும்போது மட்டும்
வார்த்தை
பஞ்சம்
ஏற்படுகிறதே...!


குழந்தைத்தனம் 
செய்வதில் 
குழந்தை
நீ....!

நிலா 
தெருவில்
நடப்பதை 
பார்த்திருக்கிறேன் ...
நீ 
நடக்கும் போது ...!

நீ 
இருக்கும்
வீடு
சொர்க்கம் தான் ....!
தேவதை
இருக்கும்
இடத்தை 
வேறு
எப்படி
அழைப்பது....?

நீ 
வெட்கப்பட்டு 
முகத்தை 
மறைத்து
கொள்ளும் போது
மலையின்
பின்னால் 
நிலவு
ஓடி 
ஒளிந்து கொள்வது
போலிருக்கிறது .....!

என் 
உயிரின் 
அத்தனை
அணுக்களிலும் 
ஆணி
அடித்தது போல 
ஆழமாய்
பதிந்திருக்கிறது 
உன்
முகம்....!

எனக்கு
கனவு என்று
ஒன்று
இருந்தால்
அதிலும்
நீ
தான்
கதாநாயகி......!