வியாழன், 3 மார்ச், 2011

உன்னை பற்றி


சேலை 
கட்டிய
சிலையே...!
 



வழி
தெரியாமல்
நடுக்கடலில்
தத்தளிக்கிறது 
என் 
இதய கப்பல் ....!
நீ
கலங்கரை விளக்காகி
என்னை 
கரை
சேர்ப்பாயா?

 
நீரின்றி 
அமையாது 
உலகு...!
அதுபோல் 
நீயின்றி
அமையாது 
என் 
உலகு.....!



உன் 
இதயத்தில் 
எனக்கு 
இட ஒதுக்கீடு 
உண்டா?
உன்
இதய 
அறைகள் 
நான்கில்
ஒரே 
ஒரு 
அறை மட்டும்
கொடு
அது
போதும்
எனக்கு ....!


என்
இரத்த 
அணுக்களிலும் 
உன் 
முகமே..!


உன் 
ஓர 
பார்வையில் 
ஓராயிரம் 
ஆண்டுகள் 
வாழலாம்...!


உன் 
அழகினை 
அளக்க
இன்னும் 
அளவுகோல் 
கண்டு பிடிக்கபடவில்லை....!



என் 
சிந்தனைகளை 
சிறைபடுத்தும் 
விலங்குகள் 
உன் 
கண்கள்....!


கடற்கரையில் 
உன்
பாதம்
பட்டதும் 
கடல் நீரும் 
இளநீரானது...!



உன் 
இதயத்துக்குள் 
நான் 
வர
நுழைவுத்தேர்வு....!
அதனால் தான் 
உன் 
கண்களை 
படித்து 
கொண்டிருக்கிறேன்....!


இருக்க 
இடம் 
கிடைக்காமல் 
இரு 
இறக்கைகளோடு
அலையும் 
பறவைக்கு
அடைக்கலம் 
கொடுக்கும் 
மரம் போல
உன் 
இதயத்தில்
எனக்கு 
ஒரு
இடம் 
கொடுப்பாயா...?


நீ 
சுவாசித்த 
அதே 
காற்றை 
நானும் 
சுவாசித்திருக்கிறேன் ....!
அதனால் தான் 
இன்னும் 
உன் 
நினைவு 
என்னில் 
நீச்சலடிக்கிறது...!


பலர் 
என்னை 
பார்த்து 
நீ
கொடுத்துவைத்தவன் 
என்றார்கள்....!
உண்மை தான்...!
என் 
இதயத்தை 
உனக்கு 
கொடுத்து
அதை 
உன்னிடமே
வைத்து விட்டவன் 
நான்....!


அழகே!
உன் 
அழகின் 
இரகசியம் தான் 
என்ன?
சொல்!
உலக அழகி
என்னிடம் 
கேட்கிறாள்....!


என் 
கைபேசி 
ஒலிக்கும் 
போதெல்லாம் 
நீ தான் 
அழைக்கிறாயோ என்று 
நான் 
பார்க்கும் 
போதெல்லாம் 
மாற்றமே இல்லாமல் 
அதே 
ஏமாற்றமே 
கிடைக்கிறது.....!


கடல் அலைகள் 
எப்போதும் 
இரைச்சலிட்டு 
ஏதோ
சொல்லி
கொண்டிருக்கின்றன...!
நான்
என்னவென்று கேட்டேன்...?
அது
கண்ட
பெண்களிலே
உலக அழகி   
நீ தான் 
என்று
ஓயாமல்
உரக்க
கத்தி கொண்டிருக்கிறது ....!



அதனால் தான்
அவை 
எப்போதும்
உன் 
பாதங்களை
தொட்டு பார்க்க 
விரும்பியே
கரைக்கு
வருகின்றன ....!



























 































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக